சிறுவர் கல்வி வளர்ச்சி நிதி
இலங்கையில் யுத்தம் நிகழ்ந்த போது அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் சுவிற்சர்லாந்துக்கு இடம் பெயர்ந்தவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவி செய்யும் நோக்கத்தில் 1994ம் ஆண்டு நடுப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்டவர்கள் சிறுவர் கல்வி வளர்ச்சி நிதிக்கு இணைந்து செயற்பட முன்வந்தனர்.
மன்னார் மடுமுகாமில் சிறுவர்கள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவிகள் தேவை என்பதை அறியக்கூடியதாக இருந்த நிலையில் அவர்களின் கல்விக்கு எங்களால் முயலுமான உதவிகளை வழங்கும் நோக்கில் மறைந்த மறை மாவட்ட ஆயர் ஆண்டகை இராயப்பு ஜோசேப் அவர்களுக்கு 24.11.1994 ல் எங்களுடைய நிலைப்பாடும் சிறுவர்கல் விவளர்ச்சிக்கு உதவி செய்ய விரும்புகின்றோம் என்றும் கடிதம் எழுதி இருந்தோம்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் 21.12.1994 ல் ஆண்டகை அவர்கள் பதில் எழுதியிருந்தார் அதில் கல்வித்தேவை அதிகமாக உள்ளதென்றும் இத்திட்டம் தனது நேரடிப்பார்வையின் கீழ் அமுல் படுத்தப்படுமென்றும் மடு அகதி முகாமும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலுள்ள சிறுவர்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்தப்படல் வேண்டுமென்றும், நாம் 1995 தைமாதம் தொடக்கம் உதவிவழங்கி செயற்படுத்தமுடியும் என்பதுடன் வங்கிவிபரமும் அனுப்பிவைத்தார். நாங்கள் அவற்றை ஏற்றுக்கொண்டு 1995 பங்குனி மாதம் தொடக்கம் உதவி செய்வதென்று முடிவுசெய்தோம்.
சிறுவர்களின் கல்வி வளர்ச்சி நிதிக்கு உதவி செய்ய சமூகவளர்ச்சியில் ஆர்வம் உள்ளவர்கள், நண்பர்கள்என 50 பேர் இணைந்து கொண்டார்கள்.
முதல்கட்டமாக 50பேரும் இணைந்து 1995 பங்குனி மாதம் தொடக்கம் 1998 வைகாசி மாதம் வரை மாதாந்தம் 500 சுவிஸ் பிராங்குகள் மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கிய வங்கிக் கணக்கிலக்கத்திற்கு சிறுவர் கல்வி வளர்ச்சி நிதியை அனுப்பிவைத்தோம்.
இரண்டாம் கட்டமாக மேலும் 50 பேர் இணைத்துக் கொள்ளப்பட்டனர். எல்லாமாக இணைந்து கொண்ட 100 பேரும் சிறுவர் கல்வி வளர்ச்சிக்கு 1988 ஆனி மாதம் தொடக்கம் 2004 ம் ஆண்டு மார்கழி மாதம் வரையில் மாதாந்தம் 1000 சுவிஸ் பிராங்குகளை மேற் குறிப்பிட்ட வங்கி விபரத்துக்கு அனுப்பி இருந்தோம்.
சிறுவர் கல்வி வளர்ச்சி நிதியின் மூலம் முன்னெடுக்கப்பட்ட பணிகள்:
பாலர்பாடசாலை, சிறுவர்இல்லம், தொண்டர் ஆசிரியர்கள், தாய் தந்தையை இழந்த மாணவர்கள், வறுமையில் உள்ளக் கல்வி உதவிகள்.
மேற்படி உதவிகள் எல்லாம் மறைந்த ஆண்டகை இராயப்பு ஜோசெப் அவர்களின் மேற்பார்வையின் கீழ் 1995 தை மாதம் தொடக்கம் 2004 மார்கழி மாதம் வரை நடைபெற்றது.
திரு கோனமலையில் தாய் தந்தையை இழந்த 200 இற்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பராமரித்து வரும் அன்பு இல்லம் திரு. ச.சுந்தரலிங்கம் ஐயா அவ ர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கிவந்தது, பிள்ளைகள் பல்வேறுபட்ட பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வந்தனர் அவர்களின் கல்வித் தேவையை நோக்கமாக கொண்டு அவர்களுக்கு உதவ முடிவு செய்து 1999ம் ஆண்டில் இருந்து 2004 ம் ஆண்டுவரை 250 சுவிஸ் பிராங்குகளை அனுப்பிவந்தோம் இவர்களில் பலர் பயன்பெற்றுள்ளனர்
சிறுவர் கல்விவளர்ச்சி நிதியானது 2004 மார்கழி மாதம் வரை இயங்கிவந்தது.